Sunday, April 29, 2012

புனர்வாழ்வு அளிக்கப்படாத புலி உறுப்பினர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Sunday, April 29, 2012
இலங்கை::இதுவரையில் புனர்வாழ்வு அளிக்கப்படாத புலி உறுப்பினர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதிக் கட்ட போரின் போது தலைமறைவாகிய மற்றும் தப்பிச் சென்ற புலிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்படாத 500 புலி உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இவர்களில் 200 பேர் திருகோணமலைப் பிரதேசத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.சில சிரேஸ்ட புலி உறுப்பினர்களும் இவ்வாறு தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் பொலிஸார் தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment