Sunday, April 29, 2012

செ‌ங்க‌ல்ப‌ட்டு அ‌க‌திக‌ள் முகா‌‌ம்க‌ளி‌ல் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌ம் 7 பே‌‌ரி‌ன் உட‌ல் ‌நிலை மோச‌ம் அடை‌ந்ததா‌ல் மரு‌த்துவமனை‌யி‌‌ல் அனும‌தி!‌

Sunday, April 29, 2012
செ‌ங்க‌ல்ப‌ட்டு::செ‌ங்க‌ல்ப‌ட்டு இலங்கை அ‌க‌திக‌ள் முகா‌‌ம்க‌ளி‌ல் தொட‌ர்‌ உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌ம் மேலு‌ம் 7 பே‌‌ரி‌ன் உட‌ல் ‌நிலை மோச‌ம் அடை‌ந்ததா‌ல் மரு‌த்துவமனை‌யி‌‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

செ‌ங்க‌ல்ப‌ட்டு இலங்கை அ‌க‌திக‌ள் முகா‌மி‌ல் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ள் 10‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் அ‌ங்கு ‌சிறை வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். தங்களை திறந்தவெளி சிறைக்கு மாற்ற‌க் கோ‌ரி கட‌ந்த 17ஆ‌ம் தே‌தி முத‌ல் இலங்கை புலி ஆதரவு த‌‌மிழ‌ர்க‌ள் விக்ரமசிங்கம், அருள் குலசிங்கம், சதீஷ்குமார், சிவக்குமார், நாகராசு, பராபரன், நந்தகுமார், ஜெயராமன், சேகர், சதர்சன் உ‌ள்பட 14 பே‌ர் உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌தி‌ல் உ‌ண்ணா‌விர‌த‌ம் இரு‌ந்து வ‌ந்த சேக‌ர், நாகராசு, சுத‌ர்ச‌ன் ‌உ‌ள்பட 5 பே‌ர் உட‌ல் ‌நிலை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு மரு‌‌‌த்துவமனை‌யி‌ல் அனு‌‌‌ம‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்‌ட‌‌ம் 14வது நாளை எ‌ட்டியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், இ‌ன்று மேலு‌ம் 7 பே‌ரி‌ன் உட‌ல் ‌நிலை மோச‌ம் அடை‌ந்தது. இதையடு‌த்து அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

No comments:

Post a Comment