Sunday, April 29, 2012

ஹெரோய்னுடன் இருவர் கைது!:-சிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் கைது!

Sunday, April 29, 2012
இலங்கை::களனி - கோனாவலை பிரதேசத்தில் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டடின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனமொன்றை சோதனைக்கு உட்படுத்திய வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 600 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடஹமுல்ல நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் கைது!

சிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் ரயில் குறுக்கு வீதி காக்கைபள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவரே 11 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதோடு அவர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, 1000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் குருநாகல் - சிலாபம் வீதியில் வசிக்கும் ஒருவரும் சிலாபம் காக்கைபள்ளியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment