Sunday, April 29, 2012

தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்காக இலங்கை இழப்பீடு தர வேண்டும் - மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா!

Sunday, April 29, 2012
சென்னை::தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்காக இலங்கை இழப்பீடு தர வேண்டும் - மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்காக இலங்கையிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று சுற்றுலா மற்றும் மீன் வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, இத்தாலிய கடற்படையால் அண்மையில் கொல்லப்பட்ட 2 மீனவர்களுக்கு தலா ஒரு கோடியை அந்த அரசு வழங்கியது. தமிழக கடற்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட நமது மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு பலியாகி உள்லனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். இலங்கை அரசு மீது இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உரிய நிவாரணத்தை தமிழக மீனவர்களுக்கு பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

No comments:

Post a Comment