Saturday, March 31, 2012

தனுஷ்கோடி மணல் திட்டில் இலங்கை வாலிபர்: மீட்க அதிகாரிகள் நடவடிக்கை!

Saturday, March, 31, 2012
ராமேஸ்வரம்::தனுஷ்கோடி முதலாவது மணல் திட்டில் இருக்கும், இலங்கை நபரை மீட்க, ராமேஸ்வரம் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை புங்குடு தீவை சேர்ந்த சதீஷ்குமார், 35, சில நாட்களுக்கு முன், ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித் திரிந்தார். இவரை, போலீசார் பிடித்து சோதனை செய்தனர். இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்ததால், புலனாய்வு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். புலனாய்வு துறையினரின் விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன், இலங்கையிலிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்தது தெரியவந்தது. ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்க வந்ததாக தெரிவித்தார். "விரைவில் இலங்கை செல்வேன்' எனக் கூறிய இவரிடம், "தேவையில்லாமல் சுற்றித் திரியக் கூடாது' என, போலீசார் அறிவுறுத்தினர். இந்நிலையில், நேற்று அதிகாலை, தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்ற இவர், அங்கிருந்து கடலில் நீந்தி, தனுஷ்கோடி கடலில், முதலாவதாக உள்ள மணல் திட்டுக்கு சென்றார். அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், அவரைப் பார்த்ததும், அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இவரை மீட்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment