Saturday, March 31, 2012

இலங்கையை அவமானப்படுத்தும் நோக்கிலேயே ஜெனிவாவில் முறைப்பாடு - திவயின!

Saturday, March, 31, 2012
இலங்கை::இலங்கையை அவமானப்படுத்தும் நோக்கிலேயே, ஜெனிவா சென்ற இலங்கை தூதுக்குழுவினர், அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையில் உள்ள கமராக்களில் கூட இந்த சம்பவம் பதிவாகவில்லை.

நவநீதம் பிள்ளையிடம் இலங்கைக்கு எதிராக பொய்யான முறைப்பாடு செய்யப்பட்ட உடனே, அந்த தகவல்கள் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஜெனிவா தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை குழுவினர், தமக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக, அரசசார்பற்ற நிறுவனங்களின் குழுவினர், சுவிஸ் காவற்துறையினரிடம் முறைப்பாடுகளை பதிவுசெய்யவில்லை. அங்கு முறைப்பாடு செய்திருந்தால், அவர்களின் பொய்யான குற்றச்சாட்டு, தொடர்பான உண்மை வெளியாகியிருக்கும் என இலங்கை குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment