Saturday, March 31, 2012

வடக்கின் உள்ளுர் கலாச்சார விழுமியங்கள் மதிக்கப்பட வேண்டும் - பாதுகாப்பு அமைச்சு!

Saturday, March, 31, 2012
இலங்கை::வடக்கின் உள்ளுர் கலாச்சார பாரம்பரிய விழுமியங்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மைக்காலமாக தெற்கிலிருந்து வடக்கு செல்வோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற யுத்த வலயங்களுக்கு தெற்கைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பயணம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்த வலயங்களை பார்வையிடச் செல்லும் மக்கள், அப்பிரதேச கலாச்சார விழுமியங்களை மதித்து நடக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்து ஆலயங்களுக்கு செல்லும் போது அணிந்து செல்ல வேண்டிய ஆடைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்படடுள்ளது.

நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத சில பகுதிகள் இன்னமும் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment