Saturday, March 31, 2012

அரசாங்கத்தை வெளியேற்றும் வரையில் போராட்டங்கள் தொடரும் - எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க!

Saturday, March, 31, 2012
இலங்கை::அரசாங்கத்தை வெளியேற்றும் வரையில் போராட்டங்கள் தொடரும் ன எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் சிங்கள புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடக் கூடிய சூழ்நிலையை இந்த அரசாங்கம் தடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொருட்கள் சேவைகளின் விலைகள் கடுயைமாக உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வறிய மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்கும் அரசாங்கம், செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை வழங்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதனைத் தவிர வேறும் மாற்று வழி கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment