Saturday, March 31, 2012

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் புலிவாலுகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

Saturday, March, 31, 2012
இலங்கை::லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமைக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமையை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் நீக்க வேண்டும் என்றும், அதன்மூலம் அவருக்கு எதிராக லண்டனில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என்றும் புலிகளின் உலகத் தமிழர் பேரவை சார்பில் நேற்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இராஜதந்திர விலக்குரிமையை அனுப்பும் நாட்டினால் மட்டுமே நீக்க முடியும் என்ற போதும், இராஜதந்திர விலக்குரிமையை நீக்கும்படி பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தினால் கோர முடியும் என்று புலிகளின் உலகத் தமிழர் பேரவை சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இராஜதந்திர விலக்குரிமையை நீக்க மறுத்தால், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தினால், அவரை நீதிமன்ற உத்தரவுப்படி நாடு கடத்த முடியும் என்று புலிகளின் உலகத் தமிழர் பேரவை சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா நீதியின் முன் நிறுத்தப்பட்டு பொறுப்புக்கூற வேண்டும் என்று புலிகளின் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவிலும் நியுயோர்க்கிலும் உள்ள ஏனையவர்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் புலிகளின் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரா தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான போரில், முகமாலைப் பகுதியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி கரையோரமாக முன்னேறிய இலங்கை இராணுவத்தின் 55ஆவது டிவிசனுக்கு மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவே தலைமை தாங்கியிருந்தார்.

No comments:

Post a Comment