Saturday, March 31, 2012

புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு: உயர்நீதிமன்றத்தில் 9-ந் தேதி விசாரணை!

Saturday, March, 31, 2012
சென்னை::புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் (புலி)வைகோ தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 9-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

புலிகள் இயக்கத்தைத் தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் (புலி)வைகோ ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணை வருகிற 9-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் கிருபாகரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கில் (புலி)வைகோ 9-ந் தேதி ஆஜராகி வாதாடுகிறார்.

No comments:

Post a Comment