Saturday, March 31, 2012

ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தால் எமக்கே பாதிப்பு - திஸ்ஸ விதாரண!

Saturday, March, 31, 2012
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இலங்கை எதிர்காலத்தில் சிறப்பான பாதையில் பயணிக்க முடியுமென சோஷலிச மக்கள் முன்னணி குறிப்பிடுகிறது.

ஜெனீவா மாநாட்டின்போது இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைத்த நாடுகளை தூற்றுவதில் எவ்வித பயனுமில்லை என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வூடகச் சந்திப்பில் அமைச்சர் ரோசிரியர் திஸ்ஸ விதாரண, அமைச்சர் டி.யூ.குணசேகர மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

No comments:

Post a Comment