Friday, March 2, 2012

அமெரிக்காவின் விசேட படைப்பிரிவு இலங்கையில்!

Friday, March 02, 2012
இலங்கை::அமெரிக்காவின் விசேட படைப்பிரிவு, தெற்காசிய நாடுகள் ஐந்தில் இருப்பதாக பென்டகனின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த ஐந்து நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகிறது.

இலங்கை, இந்தியா, நேபாளம், வங்காளதேஸ், மாலைதீவு ஆகிய தெற்காசிய நாடுகளிலேயே அமெரிக்காவின் விசேட படைகள் இருப்பதாக பென்டகன் அதிகாரியான அட்மிரல் ரொபட் வில்டட் தெரிவித்துள்ளார்.

இப்படைகள் பயங்கரவாதத்திற்கு எதிராக மிக உண்ணிப்பாக செயற்படுவதாக அவர் தெரிவித்தார். முக்கியமாக இந்தியாவில் இவர்களின் பணி மிக முக்கியமானது.

பாகிஸ்தானின் தலிபான் படைகள் மிகவும் அச்சுறுத்தல் மிக்கவை. இவற்றிக்கு எதிராக செயற்படுவது மிகவும் சிரமமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment