Friday, March 30, 2012

ஓய்வெடுத்து வரும் யுவராஜ் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சச்சின்!

Friday, March,30, 2012
லண்டன்::நுரையீரலுக்கு அருகே ஏற்பட்ட புற்றுநோய் கட்டிக்காக அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து லண்டனில் ஓய்வெடுத்து வரும் இந்திய அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கை, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த ஆண்டு (2011) உலக கோப்பை தொடரில் சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்தவர் யுவராஜ் சிங். உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்ற அவர், அதன்பிறகு பங்கேற்ற போட்டிகளில் சொதப்பலாக ஆடினார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சோதனை செய்தபோது அவரது நுரையீரலுக்கு அருகே புற்றுநோய் கட்டி ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சிகிச்சைக்காக யுவராஜ் சிங் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு 3 நிலைகளில் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 18ம் தேதி சிகிச்சை முடித்த யுவராஜ் சிங் டிஸ்சார்ஜ் ஆனார். தற்போது லண்டனில் ஓய்வெடுத்து வருகிறார்.
Read: In English
முன்னதாக யுவராஜ் சிங்கின் சிகிச்சையின் போது முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்பளே, யுவராஜ் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேற்கண்ட சம்பவங்களை யுவராஜ் சிங் தனது ட்விட்டர் இணையதளத்தில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 28ம் தேதி சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்த சச்சின், யுவராஜ் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இருவரும் 1 மணி நேரத்திற்கு மேலாக பேசி கொண்டனர். அப்போது சிகிச்சை முடித்து ஓய்வெடுத்து வரும் யுவராஜ் சிங் விரைவில் குணமாக சச்சின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருடன் சேர்ந்து சச்சின் புகைப்படம் எடுத்து கொண்டார்.

சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வரும் யுவராஜ் சிங், மே மாதம் இறுதி வாரத்தில் முழு உடல்திறனுடன் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment