Saturday, March 3, 2012

அமெரிக்கத் துருப்பினர் இலங்கையில் நிலை கொண்டிருப்பதாக வெளியானதகவல்களில் உண்மையில்லை - இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது!

Saturday, March 03, 2012
இலங்கை::அமெரிக்கத் துருப்பினர் இலங்கையில் நிலை கொண்டிருப்பதாக வெளியானதகவல்களில் உண்மையில்லை என இராணுவம் அறிவித்துள்ளது.

அமெரிக்க விசேட அதிரடிப்படையினர் இலங்கையில் நிலைகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அல்லது வேறும் எந்தவொரு நாட்டு இராணுவத்தினரும் இலங்கையில்தற்போது நிலைநிறுத்தப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புவாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான ஆற்றலை விருத்தி செய்து கொள்ளும்நோக்கில் அமெரிக்கப் படையினர் தென் ஆசிய நாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பென்டகன் உயர்அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment