Friday, March 30, 2012

நெடுந்தீவில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை!

Friday, March,30, 2012
இலங்கை::யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 13 வயதான சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு மீதான விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் இதன்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால், ஏப்ரல் ஒன்பதாம் திகதி வரை சந்தேகநபரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்தக் கொலை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட நால்வர் ஏற்கனவே தமது சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தனர்.

கடந்த மூன்றாம் திகதி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், நெடுந்தீவு எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த யேசுதாசன் லக்சினி என்ற குறித்த சிறுமியின் சடலம், நெடுந்தீவு ஒன்பதாம் வட்டாராப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

குறித்த சிறுமி வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கல்லால் தாக்கி தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த யேசுதாசன் லக்சினி ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் நான்காவது பிள்ளையாவார்.

சிறுமியின் கொலைச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது இதற்கு முன்னரும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment