Wednesday, February 29, 2012

தேசிய நல்லிணக்கத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது - தாய்லாந்து

Wednesday,February,29,2012
ஜெனீவா::தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக தாய்லாந்து பாராட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் சுரபோங் ரொவிசக்சய்குல் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துக்கான இராஜாங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெரமி பிரௌன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான பொறுப்புக் கூறல் குறித்த விடயம் இடம்பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது ஆதரவை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்டமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஊக்கமளிக்கும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment