Wednesday, February 29, 2012

பாதியிலேயே பயணத்தை முடித்துக்கொண்ட தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல்!

Wednesday,February,29,2012
தூத்துக்குடி::தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே துவங்கியது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சுமார் 152 கடல் மைல் தொலைவுள்ள இலங்கைக்கு முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து பயணத்தை மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் ஜி.கே.வாசன் கடந்த 13.06.2011 அன்று தொடங்கி வைத்தார்.

ஒளமும்பையை சேர்ந்த பிளமிங்கோ லைனர்ஸ் என்ற தனியார் கப்பல் நிறுவனம் ாஸ்கார்டியா பிரின்ஸ்ா என்ற பயணிகள் கப்பலை இருநாடுகளுக்கு இடையே இயக்கி வந்தது. முதல் பயணத்தில் இந்தியாவில் இருந்து 201 பயணிகள் இலங்கை சென்றனர். தூத்துக்குடியில் இருந்து வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், இலங்கையில் இருந்து வியாழன், ஞாயிற்று கிழமைகளிலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வந்தது. இரு துறைமுகங்களில் இருந்தும் மாலை 6மணிக்கு புறப்படும் கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு சென்று சேரும் வகையில் பயணநேரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தால் வர்த்தகம் பெருகும், துறைமுகம் வளர்ச்சி அடையும், சுற்றுலா வளர்ச்சி மேம்படும் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 18ம் தேதியன்று தூத்துக்குடியில் இருந்து இலங்கை சென்ற பயணிகள் கப்பல் அதன்பின்னர் தூத்துக்குடிக்கு திரும்பவே இல்லை.

எதிர்பார்த்த அளவிற்கு வருவாய் இல்லாததால் பயணிகள் கப்பல்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று பிளமிங்கோ லைனர்ஸ் நிறுவனம் பொய்யான தகவலை சொல்லி முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்தது. ஆனால் வாங்கிய எரிபொளுக்குரிய பணத்தை கட்டாததால் தான் பயணிகள் கப்பல் இலங்கை துறைமுகத்தில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளது என்ற ாாகுட்டுாா வெளிப்பட்டுள்ளது.

அதாவது, தூத்துக்குடிரூஇலங்கை பயணிகள் கப்பலுக்கான எரிபொருள் எம்.ஏ.ராசிக் அன்ட் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலமாக சப்ளை செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் எரிபொருள் நிரப்பிய வகையில் கப்பல் நிறுவனம் எண்ணெய் நிறுவனத்திற்கு 478,173.23 அமெரிக்க டாலரை(இந்திய மதிப்பு 2கோடியே 48லட்சத்து 65ஆயிரத்து 8ரூபாய்) பாக்கி வைத்துள்ளது.

பாக்கி பணத்தை எண்ணெய் நிறுவனம் கப்பல் நிறுவனத்திடம் பலமுறை கேட்டபோதும் ாாகவுண்டமணிரூசெந்தில் வாழைப்பழ காமெடிாா போன்று பணத்தை கட்ட கப்பல் நிறுவனம் முன்வரவில்லை. பணம் கேட்டு கேட்டு வெறுத்துப்போன எண்ணெய் நிறுவனம் நீதி கேட்டு இலங்கை வர்த்தக மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயதிலக் தூத்துக்குடிரூஇலங்கை பயணிகள் கப்பலை தடுத்து வைக்குமாறு இலங்கை துறைமுக சபை அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவின்பேரில் தூத்துக்குடிரூஇலங்கை பயணிகள் கப்பல் இலங்கை துறைமுகத்தில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மனதில் 100 ஆண்டு கனவாக இருந்த தூத்துக்குடி-இலங்கை பயணிகள் கப்பல் சேவை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதத்துடன் முற்றுப்பெற்றுள்ளது மத்திய அரசுக்கு சுனாமி எனும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்திருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இதற்கிடையே பலஆண்டு கனவாக இருந்து செயல்பாட்டுக்கு வந்த தூத்துக்குடிரூஇலங்கை பயணிகள் கப்பல் மீண்டும் தனது சேவையை துவங்கவேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள், வர்த்தகர்களின் விருப்பமாகும். சுற்றுலா பயணிகள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை துவங்குமா என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான்.

பாக்ஸ் செய்திகள்

அன்றே எதிர்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா

தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு கடந்த 2004ம் ஆண்டில் பயணிகள் கப்பல் சேவை துவங்குவதாக இருந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த முதல்வர் ஜெயலலிதா இந்த கப்பல் சேவை தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது.

பிரமாண்டமான கப்பல் குட்டி கப்பலாகிறது! கப்பல் நிறுவனம்

9அடுக்குகளை கொண்ட பிரமாண்டமான ஸ்காட்டியா பிரின்ஸ் கப்பலில் ஒரேநேரத்தில் 1040 பயணிகள் பயணிக்கலாம். ஆனால் சுமார் 30முதல் 50 பயணிகளே பயணித்ததால் கப்பல் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எனவே பிரமாண்டமான கப்பலுக்கு பதிலாக 500பேர் பயணிக்கும் குட்டிக்கப்பலை இயக்க பிளம்மிங்கோ லைனர்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

கப்பல் நிறுவனம், தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பல் வந்து செல்வதற்காக கப்பல் தளத்திற்கு விதிக்கப்படும் கட்டணத்தில் சலுகை அளிக்கவேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை துறைமுக சபையிடம் வைத்துள்ளது. கப்பலை இயக்குவதற்காக கப்பல் நிறுவனம் துறைமுக சபைக்கு 7கோடி ரூபாய் பணம் கட்டியுள்ளது. 10ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் ஆண்டுதோறும் இதே தொகையை கட்டவேண்டுமாம்.(அம்மாடியோவ்)

இந்நிலையில் கப்பலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறால் கப்பல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கப்பல் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் பயணிகளுக்கு குடியுரிமை சோதனை, பாதுகாப்பு சோதனைகளை ஒரே இடத்தில் மேற்கொள்ளவேண்டும் என்று கோரியுள்ளோம்.

விரைவில் பெரிய கப்பலுக்கு பதிலாக குட்டிக்கப்பலை வழக்கம்போல இயக்கப்படும் என்று கப்பல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதுஎப்படியோ மீண்டும் கப்பல்சேவை வழக்கம்போல நடந்தால் சரிதான் என்பதே இருநாட்டு சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment