Wednesday, February 29, 2012

:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 22 மீனவர்கள், இன்று, தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர்.

சென்னை::இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 22 மீனவர்கள், இன்று, தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்தில் இருந்து, கடந்த 25ம் தேதி, தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். 26ம் தேதி, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த, 22 மீனவர்களையும், அவர்களது, ஐந்து படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்து, இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கொழும்பு மற்றும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய தூதரகங்களை தமிழக அரசு அணுகி, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தது.இதையேற்ற தலைமன்னார் கோர்ட், 27ம் தேதி, 22 மீனவர்களையும், அவர்களது, ஐந்து படகுகளையும் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் விடுவித்தது.இலங்கை கடற்படையினரிடம் இவர்களை ஒப்படைத்த பின், இந்திய கடலோரக் காவல் படை, தமிழகத்துக்கு இன்று அழைத்து வரும் என, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment