Wednesday, February 29, 2012

இந்திய கடற்படையில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் சேர்ப்பு!

Wednesday,February,29,2012
புதுடில்லி::ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், 10 ஆண்டு குத்தகையின் பேரில், அடுத்த மாதம் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. அணு குண்டை ஏந்திச் செல்லும் வல்லமை படைத்த அக்னி,பிருத்வி உள்ளிட்ட ஏவுகணைகளை, இந்திய பாதுகாப்பு படை வைத்துள்ளது. இதற்கிடையே, வல்லரசு நாடுகளுக்கு இணையாக அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை இயக்கும் பொருட்டு, ரஷ்யாவின் "அக்குலா-2' நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டு குத்தகைக்கு வாங்கியுள்ளது. இந்தக் கப்பல், அடுத்த மாதம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்துக்கு வந்து சேர்கிறது. அதன் பிறகு, இந்தக் கப்பலுக்கு "ஐ.என்.எஸ்.சக்ரா' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நமது கடற்படை வீரர்கள் இந்தக் கப்பலை இயக்கத் துவங்குவர்.

No comments:

Post a Comment