Thursday, January 5, 2012

மட்டக்களப்பு மீள்குடியேற்றம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

Thursday,January 05, 2012
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெயர்ந்து மீளக்குடியேறாமல் இருக்கும் மக்களை, சகல அடிப்படை வசதிகளுடனும் மீளக்குடியேற்றி அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பது சம்மந்தமான முக்கிய கலந்துரையாடலொன்று மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன் போது மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச். குணரத்ன வீரகோனுக்கு கிழக்கு மாகாண சபையின் விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சர் டொக்டர். துரையப்பா நவரெத்தினராஜா விளக்கமளிப்பதை படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment