Monday, December 12, 2011

மன்னார் தாழ்ப்பாடு பிரதேசத்தில் பத்து கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கடற்படையினரால் மீட்பு!

Monday, December 12, 2011
இலங்கை::பத்து கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் தாழ்ப்பாடு பிரதேசத்தில் இந்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

பிறவுண் சுகர் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப் பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

சுமார் நான்கு கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினர் குறித்த போதைப் பெருட்களை மீட்டுள்ளனர்.

போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒன்பது சிம் அட்டைகளும், 2000 ரூபா இந்திய நாணயமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment