Monday, December 12, 2011இலங்கை::குவைத்தில் தொழிலுக்காகச் சென்று நிர்க்கதியான 70 பணிப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் நேற்றையதினம் நாடு திரும்பியதாக விமான நிலையச் செய்தியாளர் கூறினார்.
பல்வேறு பிரச்சினைகள் மற்றும் வீட்டுரிமையாளர்களின் துன்புறுத்தல்கள் காரணமாக, பணியாற்றிய வீட்டிலிருந்து தப்பிச் சென்று குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த பெண்களே நாடு திரும்பியுள்ளனர்.
குவைத்தில் தொழிலுக்குச் சென்று நிர்க்கதியான 100 பணிப் பெண்கள் கடந்த ஐந்தாம் திகதி நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment