Sunday, December 04, 2011இந்தியாவில் இருந்து வெளிவரும் எப்.எச்.எம். என்ற பத்திரிகையின் டிசம்பர் மாத இதழுக்கு பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ள சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய டி.வி.யின் பிக்பாஸ் டி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனவர் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் இந்தியாவில் இருந்து வெளிவரும் எப்.எச்.எம். என்ற ஒரு பத்திரிகையின் டிசம்பர் மாத இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.
அதில் தனது வலது கையின் தோள்பட்டை அருகே பாகிஸ்தானின் உளவுத்துறை முத்திரையான ஐ.எஸ்.ஐ. என்று பச்சைகுத்தியுள்ளார். இந்த புகைப்படம் டூவிட்டர், பேஸ் புக் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது. ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை முத்திரையுடன் வீணா மாலிக் நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
எப்.எச்.எம். பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுக்க வில்லை என்று பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் மறுத்துள்ளார். ''ஆடையுடன்தான் கவர்ச்சி போஸ் கொடுத்தேன் என்றும் ஆனால் அது நிர்வாணமாக மார்பிங் செய்து மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
தனது கையில் ஐ.எஸ்.ஐ. என்ற பாகிஸ்தான் உளவுத்துறையின் முத்திரையை ஒரு நகைச்சுவை கலந்த வேடிக்கைக்காகதான் பச்சை குத்தியிருந்தேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
வீணா மாலிக் கூறுவதை எப்.எச்.எம். பத்திரிகை நிர்வாகம் மறுத்துள்ளது. ''வீணா மாலிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தான் அவரது நிர்வாணபடம் எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. முத்திரை தெரியாத வகையில் மிகவும் மெல்லியதாக தான் வரைந்தோம். ஆனால் வீணா மாலிக்தான் அதை மிகவும் பெரிதாக வரையும்படி கேட்டுக் கொண்டார்'' என எப்.எச்.எம். பத்திரிகை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வீணா மாலிக்கின் செயல் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தானின் பழமைவாத மதகுரு மவுலானா அப்துல் குவாய் தெரிவித்துள்ளார்.
முதலில் அந்த படம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிய வேண்டும்'' என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment