Friday, December 30, 2011

சசிகலாவை வெளியேற்றியது பற்றி விளக்கம் அளிக்க முடிவு?:அ.தி.மு.க. பொதுக்குழுவில் வீசுமா புயல்...? மந்திரிகள், கட்சி நிர்வாகிகள் படபடப்பு!!

Friday, December,30, 2011
சென்னை::தானே' புயலின் பாதிப்பு குறித்த அச்சத்தில், தமிழக மக்கள் இருக்க, இன்று நடக்கவுள்ள,- அ.தி.மு.க., பொதுக்குழுவில் வீசக் கூடிய புயல் குறித்த அச்சத்தில், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளனர். அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்ட பின், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமைச்சர்கள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள் களையெடுக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு, கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. அதிகார மையங்களுக்கு விசுவாசமாக இருந்தவர்கள், "கல்தா' நடவடிக்கை பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா, நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற அச்சத்தோடு இருக்கின்றனர்.

உளவுத் துறையின் கழுகு பார்வை: இவர்களின் பயத்தை அதிகப்படுத்தும் வகையில், அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டவர்கள் மீது, உளவுத் துறையின் பார்வை தீவிரமாக இருந்து வருகிறது. தங்களது மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன, தங்களது நடவடிக்கைகள் முழுமையாக கண்காணிப்புக்குள்ளாக்கி இருக்கின்றன என, தெரிந்து கொண்ட அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தங்களது ஒவ்வொரு நடவடிக்கையையும், பலத்த யோசனைக்கு பின்பே எடுத்து வருகின்றனர். வெளியிடங்களில் யாரையும் சந்திப்பதில்லை; எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஒன்று கூடி நேரத்தை செலவழித்தலை தவிர்த்தல்; அறிமுகம் இல்லாதவர்களின் போன்

அழைப்புகளை தவிர்த்தல் என, பெட்டிப் பாம்பாய் முடங்கிப் போயுள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கையில், தங்களுக்கும், "கல்தா' வந்துவிடுமோ என்ற அச்சமே, இதற்கு காரணம். இது போன்ற, "டென்ஷனுக்கு' மத்தியில், அ.தி.மு.க.,பொதுக்குழு இன்று கூடுகிறது. "முதல்வரின் தோழி என்று அறியப்பட்டதால் தான், அவர்கள் இட்ட கட்டளைகளுக்கு அடிபணிந்தோம். அவர்கள், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின், எங்களுக்கும், அவர்களுக்கும், எவ்வித தொடர்பும் இனி எப்போதும் இருக்காது. கட்சியில் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் அனைவரும், "அம்மா'வின் விசுவாசிகள் தான்' என, உருக்கமாக குரல் எழுப்ப, பல நிர்வாகிகள் காத்திருக்கின்றனர். இப்படி உள்ளக் குமுறல்களை கொட்ட, பொதுக்குழு வாய்ப்பளிக்குமா அல்லது கட்சித் தொண்டர்களின் சந்தேகத்தை போக்கும் வகையிலும், தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கும் வகையிலும், "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்' என்ற ரீதியில், பொதுக்குழுவின் முடிவு அமையுமா அல்லது அனைத்து புகார்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, களையெடுப்பு தொடருமா என்பது, அக்கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மதியம் 2.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம்: சசிகலா கும்பலை வெளியேற்றிய பின், முதல் முறையாக,- அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், இன்று மதியம் 2.30 மணிக்கு, சென்னை

வானகரத்தில் கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட, 3,400 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழ் கொண்டு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் யாரும் எளிதில் உள்ளே நுழைந்து விடாத அளவுக்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை நிருபர்களுக்கு செய்தி சேகரிக்க, அங்கு அனுமதி இல்லை. கூட்டம் நடக்கும் இடத்தின் வெளியே, நிருபர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா வந்ததும், முதலில் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது. அக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் உட்பட, 160 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர்...

சசிகலாவை வெளியேற்றியது பற்றி விளக்கம் அளிக்க முடிவு?

சென்னை::செயற்குழுக் கூட்டத்தில் கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அ.திமு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு, இக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட, 3,400 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. அழைப்பிதழ் கொண்டு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் யாரும் எளிதில் உள்ளே நுழைந்து விடாத அளவுக்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை நிருபர்களுக்கு செய்தி சேகரிக்க, அங்கு அனுமதி இல்லை. கூட்டம் நடக்கும் இடத்தின் வெளியே, நிருபர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா வந்ததும், முதலில் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது. அக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் உட்பட, 160 மட்டுமே பங்கேற்கின்றனர். செயற்குழுக் கூட்டத்தில் கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. செயற்குழுக் கூட்டம் முடிந்த சில நிமிடங்களில், பொதுக்குழுக் கூட்டம், அவைத் தலைவர், மதுசூதனன் தலைமையில் துவங்கும். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அமைப்புச் செயலர் செம்மலை எம்.பி., தலைமை நிலைய செயலர் செங்கோட்டையன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், மகளிர் அணி சார்பில், கணிதா சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் பேச அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

சசிகலா கும்பலை வெளியேற்றியது ஏன், அ.தி.மு.க., இரு முறை ஆட்சியை இழந்ததற்கான காரணங்கள், கடந்த ஆறு மாதங்களில் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதகங்கள் ஆகியவை குறித்து, தொண்டர்களுக்கு இன்றைய கூட்டத்தில் விளக்கப்படும் என்று தெரிகிறது. முல்லை பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்னை, தமிழக அரசுக்கு கூடுதல் நிதி பெறுவது, இலங்கை தமிழர்கள் பிரச்னை, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடருவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மத்திய அரசை வலியுறுத்தியும், கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கட்சி தொடர்பான புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டதும், அந்த புகாருக்கு, 15 நாட்களில் பதில் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கும், கட்சிக்கும் பாலமாக, நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும்; எம்.ஜி.ஆர்., மன்றம், ஜெயலலிதா பேரவைகளை வலுப்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகளை கட்சியினர் மிரட்டக் கூடாது. இளைஞர், இளம் பெண் பாசறைக்கு உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். சசிகலா கும்பலுடன் யாரும் தொடர்பு வைக்கக் கூடாது போன்ற தீர்மானங்களும் இடம் பெறும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா சிறப்புரை ஆற்றிய பின், பொதுக்குழு நிறைவு பெறுகிறது. முன்னதாக, மதியம், 12 மணிக்கு மட்டன், சிக்கன் பிரியாணி, மீன் வறுவலுடன் அசைவ உணவு மற்றும் அறுசுவை சைவ உணவும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment