Saturday, December 31, 2011

போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

Saturday,December,31,2011
இலங்கை::போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் அசராங்கம் கவனம் செலுத்தத் தவறினால், போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக அரசியல் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்படா பட்சத்தில் மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரணிகள், போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் சத்தியாக் கிரக போராட்டங்களை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சாதகமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படாத பட்சத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும், தமி;ழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்கும் இடையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்த பேச்சுவார்;த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு ஏற்கனவே தமது தீர்வுத் திட்ட யோசனைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.

No comments:

Post a Comment