Saturday, December 31, 2011

நாகர்கோவிலில் கூடங்குளம் அணு உலை ஆதரவு மாநாட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Saturday,December,31,2011
நாகர்கோவில்::அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி மற்றும் கூடங்குளம் அணு உலை ஆதரவு மக்கள் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் அணு உலை ஆதரவு 3 நாள் மாநாடு நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று மாநாட்டுக்கு வந்திருந்த ஒரு பிரமுகர் மண்டபத்தின் முகப்பில் நின்று கொண்டு இருந்ததார். அப்போது ஒரு காரில் 4 பேர் அங்கு வந்து, பிரமுகரின் சட்டையை பிடித்து இழுத்து கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாகவா மாநாடு நடத்துகிறீர்கள்.

இது போல் மாநாடு நடத்தினால் மண்டபத்தை வெடிகுண்டு வீசி தகர்த்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமியிடம் கேட்ட போது, "கூடங்குளம் அணு உலை ஆதரவு மாநாட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. இருந்த போதிலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது'' என்று கூறினார்.

No comments:

Post a Comment