Sunday, December 25, 2011

மம்மூட்டி மகன் திருமணம் சென்னையில் நடந்தது!

Sunday, December 25, 2011
சென்னை:மம்மூட்டியின் மகனும் நடிகருமான தல்குவார் சல்மான், சென்னை தொழிலதிபர் செய்யது நிஜாமுதீன் மகள் அமல் சுல்பி, திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. எளிமையாக நடந்த இத்திருமணத்தில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாடகர் கே.ஜே. ஏசுதாஸ், சரத்குமார், ராதிகா, பிரபு, ராம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியிலுள்ள ராமதா ரிசார்ட்ஸில் திங்கட்கிழமை நடக்கிறது.

No comments:

Post a Comment