Thursday, December 29, 2011

உடஹொரம்புவயில் இரு பெண்களும் கொரகானயில் ஒருவரும் கூரான ஆயுதத்தால் குத்திக்கொலை!

Thursday,December 29, 2011
இலங்கை::குருநாகல், ரீதிகம, உடஹொரம்புவ பகுதியில் கூரான ஆயுதத்தினால் குத்தி இரண்டு பெண்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

பிரதேச காட்டுப் பகுதியொன்றிலிருந்து இரண்டு பெண்களின் சடலங்களும் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

57 மற்றும் 59 வயதுடைய இவ்விரு பெண்களின் கழுத்துப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.

இதேவேளை, பாணந்துறை கொரகான பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment