Monday, December 05, 2011முதற்தடவையாக கிழக்கு மாகாணத்திற்கான விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பிராந்தியக் காரியாலயம் மட்டக்களப்பில் இன்று (5.12.2011) காலை திறந்துவைக்கப்பட்டது.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், இலங்கை விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் பிரதம விலை மதிப்பீட்டாளர் பி.டபிள்யு,செணாரத்தின ஆகியோர் இதன் பிராந்திய காரியாலயத்தை திறந்து வைத்தனர்.
இந்த வைபவத்தில் கிழக்கு பிராந்திய விலை மதிப்பீட்டாளர் ஹின்பனாட் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமல நாதன் உட்பட போது விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் உயரதிகாரிகள் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் மட்டக்களப்பு மாவட்ட பிரிகேடியர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது இவ்வலுவலகம் திறந்து வைக்கப்பட்டு நினைவுப்பலகையும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாட்டங்களை உள்ளடக்கி இவ் அலுவலகம் செயற்படவுள்ளது.
No comments:
Post a Comment