Wednesday, December 7, 2011

சரத் பொன்சேக்காவுக்கு எதிரான ஹைகோப் விவகார வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது!

Wednesday,December,07,2011
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிரான ஹைகோப் விவகார வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக திபாலி விஜேசுந்தர நியமிக்கப்பட்டமை காரணமாக, இலக்கம் 2 நீதிமன்றத்தில் இருந்து, தாம் இலக்கம் 1 நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

இதற்கமைய பிரதிவாதியான சரத் பொன்சேக்கா விரும்பினால் மாத்திரம் ஹைகோப் விவகார வழக்கு விசாரணை, இலக்கம் 1 நீதிமன்றத்தில் முன்னெடுக்க முடியும் என நீதவான் தெரிவித்தார்.

இதன்போது சரத் பொன்சேக்கா சார்பாக பிரசன்னமாகிய சட்டத்தரணி ருக்ஷான் நாணயக்கார, தனது கட்சிக்காரர் இதற்கு ஆட்சேபனை எதனையும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

இதன் பிரகாரம் எதிர்வரும் ஒன்பதாம் திகதி முதல் ஹைகோப் விவகார வழக்கு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ முன்னிலையில், கொழும்பு - இலக்கம் 1 மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment