Wednesday,December,14,2011கனடாவில் இயங்கி வந்த தமிழ் நிறுவனம் ஒன்றின் உரிமத்தை, அந்த நாட்டு அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
புலிகளுக்கு குறித்த நிறுவனம் நிதி வழங்கியது என்று குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழ் அகதி புனர்வாழ்வுக்கான கனேடிய நிறுவனம் என்ற இந்த அமைப்பு, சுமார் 7 லட்சம் டொலர்களை, கனடாவுக்கு வெளியில் இயங்கும், தகுதி பெறாத நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமைப்பு டி.ஆர்.ஓ எனப்படும் தமிழர் புனர்வாழ்வு ஒழுங்கமைப்புக்காக, 2005 ஆம் ஆண்டு மே மாதம், 6 லட்சத்து 20 ஆயிரம் டொலர்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment