Saturday, December 31, 2011

புதுவருட கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் - அஜித் ரோஹண!

Saturday,December,31,2011
இலங்கை::புதுவருட பிறப்பைக் கொண்டாடும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பபடும் பல்வேறு களியாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கிய விசேட பாதுகாப்பு திட்டமொன்றை பொலிஸார் தயாரித்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றவர்களை கைதுசெய்வதற்கும் முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமாக அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

காலிமுகத்திடலின் பாதுகாப்புக்காக மாத்திரம் 850 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.

கடந்த சில தினங்களின் தரவுகளை அவதானிக்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், நாட்டின் சகல முக்கிய இடங்களிலும் இன்றிரவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாகன போக்குவரத்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றவர்களை கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளை பொலிஸார் இன்றிரவு முன்னெடுக்கவுள்ளனர்.

No comments:

Post a Comment