Sunday, December 11, 2011

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தமது இந்தோனேசிய விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார்!

Sunday, December 11, 2011
இலங்கை::ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தமது இந்தோனேசிய விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார்.

பாலித்தீவில் இடம்பெற்ற நான்காவது பாலி ஜனனாயக வாதிகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தார்.

இந்த மாவாட்டில், மாறிவரும் உலகில், ஜனநாயகத்தின் பங்களிப்பை அதிகரித்தல் என்ற தொனிப்பொருளில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ யுதயானோவை சந்தித்து பேசினார்.

அத்துடன் கட்டார் பிரதமர் மற்றும் புருனியின் சுல்தான் ஆகியோரையும் சந்தித்து பேசி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment