Saturday, December 31, 2011

சட்டவிரோதமாக மலேஷியாவிலிருந்து இந்தோனேஷியாவிற்கு செல்ல முற்பட்ட 12இலங்கையர்களும்/4ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் மலேஷியாவில் கைது!

Saturday,December,31,2011
மலேஷியா::பன்னிரண்டு இலங்கையர்களும் நான்கு ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களும் மலேஷியாவிலிருந்து இந்தோனேஷியாவிற்கு செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட இவர்கள் நேற்று மாலை Pantai Sungai Tengah, Bandar Penawar பகுதியில் மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தவர்கள் 17 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு மூலம் இந்தோனேஷியாவிற்கும் பின் அவுஸ்திரேலியா செல்வதே இவர்களது நோக்கமாக அமைந்திருந்தமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக 985 பேர் சட்டவிரோமான முறையில் மலேசியாவிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்ல முயற்சித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment