Saturday, December 31, 2011

இலங்கையில் இருந்து கடத்தி வந்த ஹெராயினை கேப்ஸ்யூலில் அடைத்து கடத்தியவருக்கு: 10 ஆண்டு சிறையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும்!

Saturday,December,31,2011
மதுரை::இலங்கையில் இருந்து கடத்தி வந்த ஹெராயினை கேப்ஸ்யூலில் அடைத்து கடத்தியவருக்கு, 10 ஆண்டு சிறையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை கோர்ட் தீர்ப்பளித்தது.தூத்துக்குடி மாவட்டம் சோரிஸ் புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலமுருகன், 23. கடந்த 2010ல், கன்னியாகுமரி - திருச்செந்தூர் ரோட்டில் சுங்கத் துறை எஸ்.பி., தலைமையிலான குழுவினர் இவரைப் பிடித்தனர். இவரிடம், 99 ஹெராயின் கேப்ஸ்யூல்கள் இருந்தன.

மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் இவ்வழக்கு நடந்தது. விசாரணையின் போது பாலமுருகன், "இலங்கையைச் சேர்ந்த குரு என்பவர் ஹெராயினை கொடுப்பார். அதை சென்னையில் ஜேசுதாசனிடம் சென்று கொடுப்பேன். குரு, ஜேசுதாசன், கேரளாவைச் சேர்ந்த மணிகண்டன் சேர்ந்து, இக்கடத்தலைச் செய்வோம். மற்ற மூன்று பேர், தலைமறை வாக உள்ளனர்' என்றார்.

நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி, ""பாலமுருகனுக்கு 10 ஆண்டு சிறை, ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டத்தவறினால், மேலும் மூன்று மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment