Saturday, December 31, 2011

இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட தமிழக மீனவர்கள்!

Saturday,December,31,2011
இலங்கை::சீரற்ற வானிலை காரணமாக இலங்கை வடக்கு கடற் பிரதேசத்தில் நிர்க்கதியான இந்திய மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

21 மீனவர்களுடன் காணாமற்போயுள்ள ஐந்து மீன்பிடி படகுகளை கண்டுபிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த ஆறு மீனவர்களும் காப்பாற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவர்களே சீரற்ற வானிலையால் காணாமற்போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை கடற்படையின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு கடற்படை பிரிவுகள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன. ஏனைய மீனவர்களை கண்டுபிடிப்பதற்காக தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment