Monday, December 12, 2011

தலைநகரமாக அறிவித்து டெல்லிக்கு இன்று 100 வயது மக்களவையில் வாழ்த்து!

Monday, December 12, 2011
புதுடெல்லி : தலைநகர் டெல்லிக்கு இன்று 100 வயது பூர்த்தியாகிறது. இதனையொட்டி டெல்லி நகர மக்களுக்கு மக்களவையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மொகலாயர் காலத் தில் இந்தியாவின் தலைநகராக டெல்லி இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியா வந்ததும் முதலில் கொல்கத்தாவை தலைநகராக வைத்து அவர்கள் ஆட்சி செய்தனர். கடந்த 1911ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி டெல்லியை இந்தியாவின் தலைநகராக ஆங்கிலேய அரசு அறிவித்தது. இந்தியாவின் தலைநகராக டெல்லி அங்கீகரிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று காலை மக்களவை கூடியதும், தலைநகர் டெல்லியின் 100வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் டெல்லி மக்களுக்கு சபாநாயகர் மீராகுமார் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்தியாவில் மிகப்பெரிய நகரமாக டெல்லி உருவாகியிருப்பதை நினைவு கூர்ந்தார். மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நகராக டெல்லி விளங்குகிறது. உலக அளவில் மிகவும் பசுமையான தலைநகரங்களில் ஒன்றாகவும், உலக தரம் வாய்ந்த கட்டமைப்புகளுடன், பழமையான நினைவுச்சின்னங்கள் நிறைந்த நகரமாகவும் டெல்லி விளங்குகிறது.

No comments:

Post a Comment