Sunday, November 20, 2011இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இணைய உள்ளடக்கத்தை இலங்கையின் வேண்டுதலின் பேரில் கூகிள் நீக்கியுள்ளது. இப்படியான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டதாகவும், அதற்கு தாம் இணங்கியதாகவும் கூகிள் அறிவித்துள்ளது.
வேறு தொழில்நுட்ப, தொடர்பாடல் நிறுவனங்களைப் போல், சிரமமாக இலங்கை அரசு காரியாலயங்களிலிருந்தும் உலகிலுள்ள நீதிமன்றங்களிலிருந்தும் தமது இணையத்திலிருந்து உள்ளடக்கங்களை நீக்குமாறு கோரிக்கைகள் விடப்படுகின்றன.
சில அவதூறு ஏற்படுத்துவதாகவும், சில உள்நாட்டு சட்டங்களை மீறுவதாகவும், சில பாலியல் மற்றும் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் உள்ள உள்ளடக்கங்கள் நீக்கப்படுகின்றன. நாட்டுக்கு நாடு இச்சட்ட விதிகள் வேறுபட்டு காணப்படுகின்றன. இலங்கை அரசின் கோரிக்கையின் பேரில் கூகிள் தமது உள்ளடக்கங்களை நீக்கினால், கூகிள் இலங்கை அரசியல் பிரசார பகுதிகளையும் நீக்க வேண்டுமெனவும், அவை தமிழர்களைப் பாதிப்பதாகவும் தமிழ் ஆர்வலர் ஒருவர் ஈழம் ஈ செய்திச் சேவைக்குக் கூறினார்.
No comments:
Post a Comment