Sunday, November 20, 2011

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக உள்நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்-ரணில் விக்கிரமசிங்க!

Sunday, November 20, 2011
சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக உள்நாட்டில் மக்கள் போராட்டங்களை நடாத்துவதோடு வெளிநாடுகளிலும் பிரசாரங்களை மேற்கொண்டு ஒத்துழைப்பை கோருவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் பெயர் விபரங்களை வெளியிடாத அரசாங்கம் பயங்கரவாதத்திற்காக பணம் வழங்கிய கே.பியை சுக போகங்களுடன் பாதுகாக்கின்றதென்றும் தெரிவித்தார்.

கொழும்பு தெமட்டகொடை சந்தியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment