Wednesday, November 30, 2011

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு!

Wednesday, November 30, 2011
இம்பால் : மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இம்பாலில் உள்ள ஹப்தா கங்ஜெய்பங் மைதானத்தில் சங்கய் திருவிழாவுக்காக ஏராளமான வெளிநாட்டினர் கூடியிருந்தனர். மைதானத்தின் வாசலில் பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ரிக்ஷாவில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் ரிக்ஷாகாரர் கோரா படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வெடிகுண்டை மணிப்பூர் பிரிவினைவாதிகள் வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். குண்டுவெடிப்பு நடந்த இடம், டிசம்பர் 3ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் திறக்க உள்ள நகர மாநாட்டு அரங்கில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment