Wednesday, November 30, 2011

ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்:-தெஹிவளை கல்வல வீதி மதரஸாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!

Wednesday, November 30, 2011
தெஹிவளை பிரதேசத்தில் கல்வல வீதியில் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவுக்கு ஒன்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தெஹிவளை பிரதேசத்தின் கல்வல வீதி மிருகக்காட்சி சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவாகவும் , மஸ்ஜித்தாகவும் இயங்கிவந்த கட்டடத்திற்கு எதிராகவே அந்த ஆர்ப்பாட்டம் பெளத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்றுள்ளது .

குறித்த கட்டிடம் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் கூறியே அதற்கு எதிராக ஆர்பாட்டம் மேற்கொள்ளபட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி பெளத்த பிக்குகள் தலைமையில் பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டம் குறித்த மதரஸாவை சூழ்ந்து அங்கு நுழைந்துள்ளது எனினும் போலீசார் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மதரஸா 140 பேர்ச் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் சிறிய மதரஸாவாக இயங்கி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் மாதம் கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள அல் பௌசுல் அக்பர் மதரஸா, மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்ததை தொடந்து அது மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்ட போதும் உரிய நேரத்தில் சமூக தலைமைகளும் , அரசியல் பிரதிநிதிகள் சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இன்று பௌசுல் அக்பர் மதரஸா, மஸ்ஜித் முழு அளவில் இயங்கிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அல் பௌசுல் அக்பர் மதரஸா, மஸ்ஜித்திற்கு தேவையான போது போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றது என்று பாத்தியா மாவத்தை மஹல்லா வாசிகள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!

கொழும்பு கோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சோசலிச மாணவர் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதியமமைச்சின் செயலகத்திற்கு செல்ல முற்பட்டனர்.

இதனை தடுக்கும் வகையில் காவல் துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பாய்ச்சு தாக்குதல் ஆகியவற்றை மேற்கொண்டனர்.

இதன்போது அந்த பாதையூடான போக்குவரத்து பலமணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment