Wednesday, November 30, 2011

ஆயுதங்கள் இறக்குமதி : இந்தியா முதலிடம்!

Wednesday, November 30, 2011
வாஷிங்டன் : உலகிலேயே இந்தியா தான் மிக அதிகமான ஆயுதங்களை இறக்குமதி செய்து வருவதாக Foreign Policy magazine என்ற அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் இந்தப் பத்திரிக்கை பிரபல வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும். அந்த வகையில் கடந்த ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மாபெரும் விமானம் தாங்கிக் கப்பலை பல்லாயிரம் கோடி செலவில் நவீனப்படுத்தியுள்ள சீனா, அதன் சோதனை ஓட்டத்தை ஆரம்பித்துவிட்டதாகவும் அதுமட்டுமில்லாமல் புதிதாக விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டும் வேலைகளையும் சீனா ஆரம்பித்துள்ளதாகவும் அந்த பத்திரிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசியா, சீனக் கடல் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனா தீவிரமாக
களமிறங்கியுள்ளது. சீனா மட்டுமல்ல, இந்தியாவும் தனது ஆயுத பலத்தை பல மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீன எல்லைப் பகுதியில் இந்தியாவின் படை பலம் இதுவரை இல்லாத அளவுக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையின் சில இடங்களில், சீனாவைவிட இந்தியாவின் படை மற்றும் ஆயுத பலம் சற்று அதிகமாக உள்ளது. 2011ம் ஆண்டில் உலகிலேயே மிக அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடும் இந்தியா தான்.
2006-2010 ஆண்டுகளில் உலகின் மொத்த ஆயுத கொள்முதலில் 9 சதவீதத்தை இந்தியா கொள்முதல் செய்துள்ளாது. இதில் பெரும்பாலான ஆயுதங்கள்
ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டுக்குள் தனது படை, ஆயுத பலத்தை நவீனப்படுத்த இந்தியா 4 லட்சம் கோடி ரூபாயை செலவிட உள்ளதாகவும் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment