Wednesday, November 30, 2011

சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்-ராதகிருஸ்ணன்!

Wednesday, November 30, 2011
சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ.எஸ். ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் பிரதான யோசனைகளில் ஒன்றாக மும்மொழி சமூகம் என்றத் திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல சிங்கள உறுப்பினர்களும் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வசிப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்கு சிங்கள மக்கள் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும் எனவும், இதன் மூலம் இரு சமூகங்களுக்கு இடையிலான பிணைப்பை மேம்படுதத் முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டும் அளவிற்கு சிங்கள மக்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற விவாதங்களின் போது தாம் சிஙகள மொழியில் கருத்துக்களை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் எதிர்பார்த்தளவு வெற்றியை அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment