Wednesday, November 30, 2011

தலைமன்னாரில் வெளியேற்றப்பட்ட இடம்பெயர் மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு மீளக் குடியேற்றியுள்ளார்!

Wednesday, November 30, 2011
அண்மையில் பாதுகாப்பு தரப்பினரால் தலைமன்னாரிலிருந்து வெளியேற்றப்பட்ட இடம்பெயர் மக்களை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு மீளவும் குடியேற்றியுள்ளார்.

அரச காணிகளை சுவீகரித்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்து குறித்த இடம்பெயர் மக்களை பாதுகாப்புத் தரப்பினர் பலவந்தமாக பிரதேசங்களை விட்டு வெளியேற்றியிருந்தனர். வெளியேற்றப்பட்ட மக்கள் மீளவும் குடியேற்றப்பட்டதாக மன்னார் மாவட்ட செயலாளர் ஸ்டென்லி டி மெல் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் இடம்பெயர் மக்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும், இதனை செவிமடுத்த ஜனாதிபதி குறித்த மக்களை மீளக் குடியேற அனுமதிக்குமாறு மாவட்டச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 550 குடும்பங்கள் இவ்வாறு தலைமன்னாரில் மீளவும் குடியேறியுள்ளனர்.

No comments:

Post a Comment