Wednesday, November 30, 2011

ராமேசுவரத்தில் இன்று முதல் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்; இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற 5 மீனவர்களை விடுவிக்க வேண்டும்!

Wednesday, November 30, 2011
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 700 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இந்தியா- இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை இங்கு மீன்பிடிக்க கூடாது என கூறி விரட்டினர்.

பின்னர் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் என்பவருக்கு சொந்தமான படகை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். படகில் இருந்த எமர்சன், அகஸ்டஸ், போல்டட், பிரசாந்த், வில்சன் ஆகிய 5 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 மீனவர் களையும் இலங்கை நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். தங்கச்சிமடம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த விபரம் ராமேசுவரம் மீனவர்களுக்கு தெரியவந்தது.

உடனே அவர்கள் இது குறித்து ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்துக்கும், இந்திய கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் நேற்று மாலை ராமேசுவரத்தில் அனைத்து மீனவர் சங்கங் களின் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற படகையும், 5 மீனவர்களையும் உடனடி யாக விடுவித்து ராமேசுவரத்தக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் விடுதலை செய்யப்படவில்லை. இதை தொடர்ந்து ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இன்று 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 700 விசைப் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment