Wednesday, November 30, 2011

இலங்கைத் தொடர்பில் எந்வொரு சர்வதேச நாடும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கோ, தீர்வுகளைத் திணிப்பதற்கோ, ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது-ஜீ.எல்.பீரிஸ்!

Wednesday, November 30, 2011
இலங்கைத் தொடர்பில் எந்வொரு சர்வதேச நாடும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கோ, தீர்வுகளைத் திணிப்பதற்கோ, ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வக்கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்தவாரமளவில் இலங்கை வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட விவாதத்தில் வெளிவிகார அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 2013 ம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த சர்வதேச ரீதியில் 54 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. அத்துடன் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் கூறியுள்ளன.இவ்வாறான நிலையில் பொதுநலவாய நாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி கவலையளிக்கினறது.

அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் முரண்படுவதாகவும், சிறந்த உறவுகளைப் பேணுவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்துகின்றார். இந்த குற்றச்சாட்டில் எதவித உண்மையும் இல்லை.

இலங்கைக்கு எதிராக ஒருசில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகளை நாம் சர்வதேச நாடுளின் ஒத்துழைப்புடன் முறியடித்திருக்கின்றோம். உறவுகள் பேணப்படாதிருந்தால் இது சாத்தியமாகி இருக்காது.

சர்வதேச நாடுகளுடனான எமது உறவு சிறப்பாக பேணப்பட்டு வருகின்றது. எனினும் இலங்iகைத் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு எந்தவொரு பிறநாட்டிற்கும் உரிமை கிடையாது. அதேபோல் எமது நாடு குறித்து தீர்வுகளைத் திணிக்கவும் முடியாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.

எமது நாட்டு விடயங்களை நாமே கையாள்வோம். ஆனாலும் பகைமை மற்றும் பொறாமைகளை நாம் வளர்க்கவில்லை. அதனால்தான் சர்வதேச பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயங்களை மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எனவே எமது நாட்டின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசுடன் இணைந்து சேவையாற்ற வருமாறு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment