Wednesday, November 30, 2011

கொழும்பு பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த 102 பேர் கைது!

Wednesday, November 30, 2011
கடந்த இரண்டு மாதங்களுக்குள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட 102 பேர் கைது செயய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைதானவர்களில் பெரும்பாலானோர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்ட்டுள்தாக கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையை ஒழிப்பதற்காக 21 பொலிஸ் குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படுகின்ற போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக தனியான பொலிஸ் குழுவொன்றினை நியமித்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி கூறினார்.

எதிர்காலத்தில் கைது செய்யப்படும் போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர்களை கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது வழக்கு செலவுகளுக்கு பணம் தேடும் பொருட்டு அவர்கள் மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் சந்தேகநபர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸ் உயரதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

கொள்ளைச் சம்பவம ஒன்றுடன் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

கொள்ளைச் சம்பவம ஒன்றுடன் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.புத்தளம் - மன்னார் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த காவல்துறை பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் 70,000 ரூபா பணம் அண்மையில் கொள்ளையிடப்பட்டது. இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் வழங்கிய தகவலின் பேரிலேயே கந்தளாய் காவல் நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment