Friday, November 11, 2011

ஐநாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கிழக்கு முதல்வருடன் சந்திப்பு!

Friday, November 11, 2011
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ‘சுவிநே நன்டி’ அவர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று பி.ப 07.00 மணியளவில் கிழக்கு முதல்வரின் வாசஸ்த்தலத்தில் இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரங்கள், அபிவிருத்தி திட்டங்கள், மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவுகள், கிழக்கு மாகாணத்திற்கான ஐநாவின் உதவி திட்டங்கள் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment