Wednesday, November 16, 2011

வடக்கு கிழக்கில் நிலவிய பயங்கரவாத நிலைமைகளினால் பிரதேச மக்களின் மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி-ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்!

Wednesday, November 16, 2011
வடக்கு கிழக்கில் நிலவிய பயங்கரவாத நிலைமைகளினால் பிரதேச மக்களின் மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இராணுவப் படைவீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்த கால யுத்தம் சமூகத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாணவ சமூகத்தின் கல்வி உரிமைகளை பயங்கரவாதிகள் பறித்துக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் விலை மதிப்பற்ற உயிர்கள் பதுங்கு குழிகளுக்கு முடக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment