Saturday, November 26, 2011ஐக்கியநாடுகள் சபையின் யுனொப்ஸ் நிறுவனத்தினால் மட்டக்களப்பு ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் 1கோடி 10 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக்கட்டடித்தொகுதியை இன்று காலை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு திருலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
யுத்தம் மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட இப்பாடசாலையில் மிக நீண்டகால இடைவெளிக்குப்பின்னர் அமைக்கப்பட்ட கட்டிடம் இது என்பது குறிப்படத்தக்கது.
No comments:
Post a Comment